கா ணாமல்போன மூன்று இளைஞர்கள் ச டலங்களாக மீட்பு!!

484

மூன்று இளைஞர்கள்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது கா ணாமல்போன மூன்று இளைஞர்களும் ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குளத்தில் இன்று காலை 10.00 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது குளத்தின் சகதிப் பகுதிக்குள் நான்கு இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் அருகில் இருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் ஒருவர் கா ப்பாற்றப்பட்ட அதேவேளையில் மூன்று பேர் கா ணாமல்போயிருந்தனர்.

குறித்த குளத்தில் நீர்மட்டம் அதிகமாக காணப்பட்டதனால் தேடுதல் முயற்சிகள் மிகவும் கஸ்டமான நிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச சபையினால் குளத்தின் நீர் வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த மூவரின் சடலங்களும் இன்று பிற்பகல் மீ ட்கப்பட்டதுடன் மீ ட்கப்பட்ட ச டலங்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீ ட்கப்பட்டவர்கள் ஆரையம்பதி,செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த சு.தர்சன் (20வயது), கே.திவாகரன் (19வயது), எஸ்.யதுர்சன் (19வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தர்சன் திருமணம் முடித்து நான்கு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மூன்று இளைஞர்களின் ம ரணம் காரணமாக மண்முனைப்பற்று பிரதேசம் சோ கத்தில் மூ ழ்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த மீ ட்பு நடவடிக்கைகளில் இளைஞர்களும் மீனவர்களுமே ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த படையினரும் பொலிஸாரும் வேடிக்கைபார்த்து நின்றதாக அப்பகுதி மக்கள் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.