யாழ்.பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது!!

519

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் நாளைய தினம் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த கூடாது என்று மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் க ண்டிப்பான உ த்தரவை இன்று வழங்கியிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை 27ஆம் திகதி மற்றும் நாளை மறுநாள் 28 ஆம் திகதி ஆகிய நாட்களில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் இடம்பெறாது என்றும், பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்றும் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.