இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி சென்று இருந்தார். புகழ் பெற்ற குருத்வாராவில் வழிபாடு நடத்தி விட்டு அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில், சமோலியில் அலகாநந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் இருந்த கட்டிடங்கள், ஹோட்டல்களை வெள்ளம் சூழ்ந்தது.
ஹர்பஜன்சிங் தங்கி இருந்த விடுதியையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதில் ஹர்பஜன்சிங் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.
துணை இராணுவப் படையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் சென்று அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட ஹர்பஜன் சிங் கூறியதாவது…
வெள்ளத்தில் தவித்த எங்களை துணை இராணுவப் படையினர் திறமையாக செயல்பட்டு மீட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. பாபாவின் அருளால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம்.
எங்களைப் போல் ஏராளமானோரை அவர்கள் மீட்டுள்ளனர். அவர்களது பணி பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.