அறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை!!

409


அறிமுக ஆட்டத்தில்..



மாலத்தீவுக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் நேபாள அணியை சேர்ந்த ஒரு வீராங்கனை ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



போகாராவில் நேற்று நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் 20 ஓவர் போட்டியில், நேபாளம் மற்றும் மாலத்தீவு பெண்கள் அணிகள் மோதின.



இரண்டுமே சிறிய அணிகள் என்பதால் பெரியளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு, இளம்வீரங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.


போட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன்மூலம் மாலத்தீவைச் சேர்ந்த மாஸ் எலிசா என்பவரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா பெண்களுக்கு எதிராக, சிறப்பாக பந்து வீசிய எலிசா 3 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.


ஆண்கள் டி 20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு வீரர்களுக்கான சாதனையை இந்தியாவின் தீபக் சாஹர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவம்பர் 10 ஆம் தேதி நாக்பூரில் வங்கதேச அணிக்கெதிராக 3.2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அவருக்கு முன்பாக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.