நேபாளத்தில் சாதித்த மலையகத் தமிழன்!!

304

குமார் சண்முகேஸ்வரன்

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று குமார் சண்முகேஸ்வரன் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று காலை கடும் குளிருக்கு மத்தியில் நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
இவர் பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்றுள்ளார்.

இதில் தங்கத்தை இந்தியாவும் (30.49.20), வெண்கலத்தை நேபாளமும் (30.50.06) வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.