வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2019

981

வருடாந்த கலைவிழா-2019

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2020  பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு கடந்த 01.12.2019  ஞாயிற்றுகிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில்  வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி திரு சொர்ணராஜா முதன்மை விருந்தினராக கலந்து  கொண்டார்.  நிகழ்வில்  T.நர்த்தனகரன்(கணக்காளர் மதவாச்சி பிரதேச செயலகம்), N.பாஸ்கரன் (முகாமையாளர் -பனை அபிவிருத்தி சபை),T.இராஜேஸ்வரன்(உதவி கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி,வவுனியா வடக்கு வலயம்),

R.பாலரூபன்(முகாமையாளர் அலியான்ஸ் இன்சூரன்ஸ் யாழ்ப்பாணம்),  T.செந்தூரன்(  மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,கிளிநொச்சி), T.துஷ்யந்தன்(சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்,கிளிநொச்சி)  , S.திருமுகன் (விஸ்ணு பவுண்டேஷன்), R.சதீசன் (விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர் -கிரவுன் லிமிடெட்), N.ஜனகதீபன் (ஊடகவியலாளர் -வவுனியா) ஆகியோரும்  சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படிநிகழ்வில்  இரண்டாம்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை  கௌரவிக்கும்  நிகழ்வும்  முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிறைவில் ஒளிவிழா மற்றும்  சிறுவர்களுக்கான பரிசளிப்பு  வைபவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.