மன்னாரில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ம ரணம்!!

432

டெங்குக் காய்ச்சலால்..

மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளார்.

மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட மன்னார் சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 3ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவியான மரியதாசன் டிவினியா (வயது 9) என்பவரே டெங்கு காய்ச்சலிற்கு உள்ளாகி உ யிரிழந்துள்ளார்.

முசலி மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட ம ரண விசாரணையில் இறந்த சிறுமிக்கு கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும்,

ஆனால் காய்ச்சல் சுகமாகாததால் மீண்டும் 3ஆம் திகதி செவ்வாய்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமையால் குறித்த சிறுமி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.