படகு கவிழ்ந்து ஒருவர் ப லி : இருவரை கா ணவில்லை : மீட்பு நடவடிக்கை தீவிரம்!!

213

படகு கவிழ்ந்து..

கிண்ணியா உப்பாற்று பிரதேசத்தில் படகு கவிழ்ந்து நபர் ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் இருவர் கா ணாமல் போயுள்ளனர்.

இந்த நபர்கள் மஹவெலி கங்கை ஊடாக படகு ஒன்றில் பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் படகில் ஐவர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். அதிக மழையுடனான காலநிலை காரணமாக நீரின் வேகம் அதிகரித்துள்ளது.

உ யிரிழந்தவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது உடைய இக்பால் இல்ஹாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உ யிரிழந்தவரின் ச டலம் தற்பொழுது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கா ணாமல் போன இருவரையும் தே டும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கா ணாமல் போனவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.