இலங்கையில் இருந்து கணவரை தேடி தமிழகம் சென்றுள்ள தமிழ்ப்பெண் : உருக வைக்கும் பின்னணி!!

270

கணவரை தேடி..

இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்துக்கு வந்து மா யமான கணவரை கண்டுபிடிக்க கோரி தமிழ்ப்பெண் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். திருகோணமலை, பாலையூத்தைச் சேர்ந்தவர் வசந்தி (57). தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்று, திருகோணமலையில் உள்ள ஹொட்டலில் வேலை பார்த்து வந்தவர் முகமது யூசுப்.

இவர்கள் இருவரும் காதலித்து, 1979 செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த நிலையில், 1986 தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் நாகூரில் வசிக்கும் உறவினர்களை பார்த்து விட்டு வருவதாக, முகமது யூசுப் தமிழகம் வந்துள்ளார்.

அதன்பின், அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த வசந்தி, மகன் வசந்தன் (34) மகள் உஷா (32) ஆகியோரை வளர்த்து, திருமணம் செய்து வைத்துள்ளார். பல ஆண்டுகள் கடந்த நிலையில் தனக்கும் வயதாகி கொண்டே இருப்பதால் நாகூர் பகுதியில் விசாரித்தால் கணவரை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில், 3ம் திகதி நாகூர் வந்துள்ளார்.

நாகூரில் பல இடங்களில் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரை வசந்தி நேற்று சந்தித்து மனு அளித்தார். இதோடு கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.