ம துவுக்கு அடிமையான தாய் : படிப்பை நிறுத்திவிட்டு பிச்சையெடுக்கும் இரண்டு பிள்ளைகள்!!

296

தமிழகத்தில் தாய் ம து பழக்கத்துக்கு அ டிமையானதால் அவரின் இரண்டு மகன்களும் பிச்சையெடுத்து வரும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார்.

போ தைக்கு அடிமையான அந்த தாயால், இரு குழந்தைகளும் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தாயின் ம துப் பழக்கத்திற்காக, விருப்பம் இல்லாமல் பிச்சை எடுத்து வரும் இரு சிறுவர்களையும் மீட்டு, நல்ல கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதை அறிந்த ஆட்சியர் சரவணன், காமாட்சி அம்மன் கோயில் வாசலில் தங்கியிருக்கும் இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருவரின் கல்வி செலவையும் அரசே ஏற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.