இத்தாலியிலுள்ள இளைஞனை ஏமாற்றி பாரிய மோ சடி செய்த இலங்கைப் பெண்!!

256

இலங்கைப் பெண்

இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோ சடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோ தல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோ தலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்த பெண்ணை அறிந்து கொண்டுள்ளார்.

இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏ மாற்றி பல முறை பணம் பெற்றுள்ளார்.

தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் என கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.