ஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர் : பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்டவரின் கர்ப்பிணி மனைவி க ண்ணீர்!!

463

கர்ப்பிணி மனைவி

பிரியங்கா ரெட்டி வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் கர்ப்பிணி மனைவி கணவர் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போ ராடி வரும் நிலையில் பிரியங்கா போலவே கொ ல்லப்பட்ட சில பெண்களின் குடும்பத்தாரும் தங்களுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் 27ஆம் திகதி ப லாத்காரம் செய்து கொ லை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கடந்த 6ஆம் திகதி என்கவுண்ட்டரில் சு ட்டு கொ ல்லப்பட்டனர்.

இந்நிலையில் இதில் சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா (17) தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கடந்த வாரம் அளித்த பேட்டியில் என் கணவரை கொ ன்ற இடத்துக்கு அழைத்து சென்று என்னையும் கொ ன்றுவிடுங்கள் என கதறினார்.

இந்த சூழலில் கணவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து மீண்டும் அவர் பேசியுள்ளார். ரேணுகா கூறுகையில், இதே போல மற்ற ப லாத்காரம் மற்றும் கொ லை வழக்கில் கைதானவர்களை ஏன் பொலிசார் சு ட்டு கொ ல்லவில்லை?

அவர்களை மட்டும் சிறையில் அடைத்து வைத்து உணவு கொடுப்பது சரியா? என் கணவர் மீது இதுவரை எந்தவொரு கு ற்ற வழக்கும் பதிவாகவில்லை, அப்படியிருக்கும் போது பொலிசாரின் து ப்பாக்கியை அவர் பறித்தார் என்பதை என்னால் எப்படி நம்ப முடியும்?

நாங்கள் ஏழைகள் என்பதால் என் கணவரை பொலிசார் கொ ன்றிருக்கலாம் என கண்ணீருடன் கூறியுள்ளார். இதனிடையில் பிரியங்கா கொ ல்லப்பட்ட மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த 24ஆம் திகதி திருமணமான இளம்பெண் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ப லாத்காரம் செய்து கொ லை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவரின் கணவர் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது போலவே என் மனைவியை கொ ன்றவர்களும் கொ ல்லப்பட வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

இதே போல இன்னொரு இளம்பெண்ணும் பிரியங்கா கொ ல்லப்பட்ட அதே நாளில் கொ ல்லப்பட்டார். அவர் தாய் கூறுகையில், என் மகளை கொ ன்றவர்களை சிறையில் அடைக்காமல் கொ ல்ல வேண்டும் என கூறினார்.

மேலும் சாதி பார்த்து தான் பொலிசார் நடவடிக்கை எடுக்கின்றனர், பா திக்கப்பட்டவர்கள் தாழ்ந்த சாதி என்றால் முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பலரும் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.