இயக்குனர் கெளதம் மேனன் மீது மோசடிப் புகார்!!

264

Kowtham menanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன கெளதம் மேனன் போட்டோன் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் இவருடன் மேலும் நான்கு பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இவர் கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷாவை வைத்து இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா பெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ஆர்.ஜெயராமன் என்பவருக்கு ஹிந்தியில் ஏக் தீவானா தா என்ற ரீமேக் படமாக செய்து தருவதாகக் கூறி கெளதம் மேனன் பெருந்தொகையை முன்பணமாகப் பெற்றுள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டபடி அவர் படத்தை முடித்துத் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சி.டி.செல்வம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனரிடம் இதுகுறித்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் மோசடியை ஊர்ஜிதம் செய்தால் அது குறித்த விபரம் இரு தரப்பினருக்கும் வெளியிடப்படும் என்று மனுதாரர் சார்பில் பி.ரமேஷ் பாபு என்ற வக்கீல் தெரிவித்தார். இந்த உத்தரவு கடந்த சனிக்கிழமை அன்று வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.