திருமணமான டிக் டாக் தோழி வீட்டில் ஆண் வேடத்தில் வந்து தங்கிய இளம்பெண் : பின்னர் நடந்த வி பரீதம்!!

277

ஆண் வேடத்தில்..

இந்தியாவில் டிக்டாக் மூலம் தோழியான திருமணமான பெண்ணின் வீட்டில் ஆண் வேடமிட்டு இன்னொரு பெண்ணொருவர் தங்கிய நிலையில் இருவரும் ஓ ட்டம் பிடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் – அர்ச்சனா. இவர்களுக்கு 11 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அர்ச்சனாவின் சகோதரி லட்சுமி பெங்களூரில் பணிக்கு சென்றார். அங்கு அவருடன் அஞ்சலி என்ற இளம்பெண் நட்பானார். இதையடுத்து லட்சுமி தனது சகோதரி அர்ச்சனாவுடன் போனில் பேசும் போதெல்லாம் அஞ்சலியும் அவருடன் பேசி நட்பாகியுள்ளார்.

இதையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்து நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சலி, அர்ச்சனா வீட்டுக்கு வந்தார். அதுவும் ஒரு ஆண் போல தன்னை காட்டி கொண்டு, பேன்ட், சட்டை, தலையில், விக் என்று அர்ச்சனா வீட்டில் ஒரு வாரமாக தங்கினார்.

அப்போது அர்ச்சனா – அஞ்சலி நட்பு எ ல்லை மீ றுவதை பார்த்த அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றார்கள். இந்நிலையில் கணவருடன் ச ண்டை போட்டு கொண்டு அர்ச்சனா தாய் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்து நேற்று முன் தினம் அவர் தனது பிள்ளைகளோடு மா யமாகியுள்ளார். அதே போல அஞ்சலியையும் கா ணவில்லை, இது குறித்து ரவிக்குமார் பொலிசில் புகார் கொடுத்துள்ள நிலையில் பொலிசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.