வாகன விபத்தில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

213

வாகன விபத்தில்..

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 94ம் கட்டை பகுதியில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியும் வானொன்றும் மோதியதில் ஆறு பேர் ப டுகா யமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று இரவு (16.12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான 1990 அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளியொருவரை கந்தளாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது திருகோணமலையை நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டியில் பயணித்த சாரதி, உதவியாளர் மற்றும் நோயாளி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வானில் பயணம் செய்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்து 6 பேரும் தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.