குப்புசாமியின் மகள்
தான் கா ணாமல் போய்விட்டதாகவும், தன்னை க டத்திவிட்டதாகவும் வெளியாகும் செய்திகள் அனைத்துமே பொய்யானவை என்று புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல கிராமிப் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி. இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பிபிஸ் படித்துள்ளார்.
மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அலுவலராகவும் பல்லவி பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பல்லவி மா யமாகிவிட்டதாக சென்னை ஆர்.ஏ புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தனது தங்கையுடன் நடைபெற்ற வா க்குவாதத்திற்கு பிறகு அவரை கா ணவில்லை என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்லவியை சிலர் க டத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பல்லவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் மா யமாகவில்லை என்றும் தனக்கு எதுவும் நிகழவில்லை என்றும் கூறியுள்ளார்.