கொழும்பில் சற்று முன்னர் தடம்புரண்ட ரயில்!!

1032

தடம்புரண்ட ரயில்

கொழும்பு, மருதானையில் சற்று முன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கல்கிசையில் இருந்து பொல்கஹாவெல நோக்கி பயணிக்கும் ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

பவுசி ரயிலின் M11 பிரிவின் 953 என்ற என்ஜின் மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி செல்லும் போது மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

ரயில் தடம்புரண்டமை காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. அதனை சீர்செய்யும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.