
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்கள் பெயரில் லட்சக்கணக்கில் கடன் பெற்று சொத்துக்களை வாங்கி குவித்த பெண்ணின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கூடல்நகரில் வசிக்கும் இலங்கை பெண் டயானா உள்பட 36 பெண்கள் மதுரை காவல் ஆணையரிடம் பு கார் கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், நான் வசிக்கும் முகாம் அருகில் காஞ்சனா என்பவா் வசித்து வருகிறாா். அவருக்கு முகாமில் வசிக்கும் பெண்களுடன் 15 ஆண்டுகளுக்கு மேல் பழக்கம் உள்ளது.
இந்நிலையில், சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்று தருமாறு காஞ்சனா என்னிடமும், முகாமில் உள்ள பெண்கள் சிலரிடமும் கேட்டாா். கடன் பெற்று தந்தால் முறையாக திருப்பிச் செலுத்துவதாகவும் கூறினாா்.
இதை நம்பி அவருக்கு முகாமைச் சோ்ந்த நான் உள்பட 37 பெண்கள் ரூ. 50 லட்சம் கடன் பெற்று தந்தோம். அந்த கடன் தொகைக்கான தவணைகளை காஞ்சனா சில மாதங்களுக்கு திரும்பச் செலுத்தினாா்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கடன் தொகையைச் செலுவில்லை. கடன் கொடுத்தவா்கள் எங்களிடம் கேட்டாா்கள். இதுதொடா்பாக காஞ்சனாவிடம் கேட்டபோது சில நாட்களில் கடன் தொகையைத் திரும்பச் செலுத்திவிடுதாகக் கூறி வந்தவா் திடீரென்று த லைமறைவாகி விட்டாா்.
இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் முகாமிற்கு வந்து தொடா்ந்து பி ரச்னைச் செய்து வருகின்றனா். இது குறித்து பொலிசில் நவம்பா் 21ஆம் திகதி புகாா் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காஞ்சனா குடும்பத்தினா், மோ சடி செய்த பணத்தை கொண்டு பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்து சொகுசாக உள்ளனர்.
மேலும் கூடல்நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் வீடு கட்டியுள்ளனா். எனவே, காஞ்சனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், பா திக்கப்பட்டவா்கள் அனைவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். சுயஉதவிக் குழுக்கள் மூலம் மட்டும் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் மோ சடியில் காஞ்சனா ஈடுபட்டுள்ளாா். இதை தவிா்த்து முகாமில் பலரிடம் நகை, ரொக்கம் என ரூ. 4 கோடி வரை பெற்றுள்ளாா்.
காவல்நிலையத்தில் புகாா் கொடுத்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்திற்கு கேட்க சென்றால் பொலிசார் த காத வாா்த்தையால் திட்டுகின்றனா் என வேதனை தெரிவித்துள்ளனர்.




