சுற்றுலா விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று வெளிநாட்டவர்கள் படுகாயம்!!

558

சுற்றுலா விடுதி..

பதுளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி கட்டடமொன்று இன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் இடிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டவர்கள் தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூவரும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இடிந்து விழுந்த கட்டடம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பில் இருந்து கட்டட ஆய்வு பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்ற சந்தேகம் அனர்த்த முகாமைத்துவ மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.