
போ ரில் கால்களை இ ழந்த மாற்றுத்திறனாளிகளுக்காக சூரிய சக்தியில் இயங்கும் விசேட வண்டியை உருவாக்கி கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் இந்த சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார்.
இம் மூன்று சக்கரவண்டி சூரிய ஒளி இருக்கும் சந்தர்ப்பத்தில், பேட்டரி இன்றி செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சூரிய ஒளி இல்ல சந்தர்ப்பத்தில், பேட்டரி பாவனையில் 1 மணி நேரத்திற்கு 20km வேகத்தில் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை கால்களை இ ழந்தவர்கள் இலகுவாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி தீரும் பட்சத்தில் சாதாரண துவிச்சக்கர வண்டி போல மிதித்து பயணம் செய்யலாம்.
100w சூரிய சக்தியை சேமிக்க கூடிய கலன் ஒன்று இதில் பொருத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 300w சூரிய சக்தியை சேமிக்கக் கூடிய கலனாக இது வடிவமைக்கபட உள்ளது.
இலங்கையிலுள்ள பால்மா நிறுவனம் ஒன்று நடத்திய தொழில்நுட்ப போட்டியில் சிறந்த சூரிய சக்தி துவிச்சக்கர வண்டி என்ற பரிசை இம்மாணவன் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




