மன்னாரில் கா ணாமல் போன இளம் குடும்பஸ்தர் ச டலமாக மீ ட்பு!!

593

மன்னாரில்..

மன்னார் – நானாட்டான் பகுதியில் கா ணாமல் போன இளம் குடும்பஸ்தர் இன்று ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தே டப்பட்டு வந்த நிலையிலே இன்றையதினம் உ ருக்கு லைந்த நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய 30 வயதுடைய அன்ரனிஸ் நிமால் என்பவராவார். நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த சனிக்கழமை காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி மு றைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு,குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப்பகுதியில் உ ருக்குலை ந்த நிலையில் ச டலத்தை கண்ட முதியவர் ஒருவர் பங்குத்தந்தைக்கு அறியப்படுத்தினார். பங்குத் தந்தை பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்கு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார் மற்றும் விசேட த டவியல் நிபுணத்துவ பொலிஸார் வருகை தந்து வி சாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது ச டலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ பிற்பகல் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து ச டலத்தை பார்வையிட்டு பி ரேத ப ரிசோதனைக்காக சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.