கர்ப்பிணி பெண்கள் உட்பட பல நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

498

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெய்து வரும் அடைமழை மற்றும் குளிரான காலநிலை காரணமாக இன்புவென்சா வைரஸ் நோய் தொற்றின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், 2 வயதுக்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு அதிகமானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள்,

சிறுநீரக பாதிப்புக்குள்ளாவனர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளர்கள் இந்த நிலைமை தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள், காய்ச்சல், இருமல், தடுமல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.