மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குடையை விரித்த பெண்ணுக்கு நேர்ந்த சோ கம்!!

752

பெண்ணுக்கு நேர்ந்த சோ கம்

கேரளாவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண் குடையை விரிக்க, வண்டியிலிருந்து தூக்கி வீ சப்பட்டார். வேகமாக அந்த மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருக்கும்போது அந்த பெண் திடீரென குடையை விரித்ததால், அது பாராசூட் போல செயல்பட்டு அந்த பெண்ணையே தூக்கிவிட்டது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண் குடையை விரிக்கவும், அவர் தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது. தூக்கி வீசப்பட்ட அந்த பெண் தரையில் விழுந்த வேகத்தில் பின்னந்தலையில் அடிபட, சு யநினைவின்றி கிடக்கிறார்.

உடனடியாக அருகில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் உதவிக்கு வருகின்றனர். ஒருவர் அந்த பெண்ணை கையை பிடித்து தூக்குகிறார். அத்துடன் அந்த பெண்ணுடன் பயணித்தவரும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார்.

அந்த பெண்ணுக்கு எந்த அளவு காயம்பட்டது என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை என்றாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குடையை விரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் தெரியப்படுத்தியுள்ளது.