பிள்ளைகளின் க ண்ணீ..
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட ஜலீல் என்பவரின் பிள்ளைகள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போ ராட்டம் நடந்து வருகிறது, பல இடங்களில் பொலிசார் து ப்பாக்கி சூ டு நடத்தியதில் 22 பேர் ப லியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர், தினக்கூலியான ஜலீலுக்கு 14 வயதில் ஷிபானி என்ற மகளும், 10 வயதில் சபீல் என்ற மகனும் இருக்கின்றனர்.
சம்பவதினத்தன்று மங்களூருவின் பல பகுதிகளில் போ ராட்டம் நடந்ததால் பள்ளி வேன் வீடு வரைக்கும் வராமல் பாதியிலேயே பிள்ளைகளை இறக்கி விட்டுள்ளது. தன் பிள்ளைகளுடன் ஜலீல் வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் நேரத்தில், து ப்பாக்கி கு ண்டு அவரது இடது கண்ணை து ளைத்தது.
வலியால் துடித்த ஜலீலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் பாதி வழியிலேயே அவர் உ யிர் பி ரிந்தது. தங்கள் கண்முன்னே தந்தை ப லியானதை கண்டு க தறிதுடி க்கின்றனர் ஜலீலின் பிள்ளைகள்.
இதுகுறித்து அவரின் உறவினர்கள் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக பொலிசார் பொய் சொல்கின்றனர். அங்கிருந்தது வெறும் 100 பேர் மட்டுமே, அவர்களை கூட கட்டுப்படுத்த பொலிசால் முடியவில்லையே, ஜலீல் போ ராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை, வீட்டில் இருந்தவருக்கு இந்த பரிதாப நிலையா? என கொந்தளிப்புடன் பேசியுள்ளனர்.