சிறுவனின் தொண்டைக்குள் சென்றது என்ன? ஸ்கேனில் மருத்துவர்கள் கண்ட காட்சி!!

473

சி றுவனின் தொண்டைக்குள்..

தமிழகத்தில் விசிலை சிறுவன் விழுங்கிய நிலையில் எண்டோஸ்கோபி உதவியுடன் மருத்துவர்கள் பல மணி நேர போ ராட்டத்துக்கு பின்னர் அதை வெளியில் எடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி- திலீப்குமார் தம்பதிக்கு கெளதம், அஸ்வின் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் விசிலை விழுங்கியுள்ளான்.

இதன்பின்னர் அவனை கா ப்பாற்றியது எப்படி என தாய் நாகஜோதி அந்த திக் திக் நிமிடங்களை விளக்கினார். அவர் கூறுகையில், பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் 20 ரூபாய் பரிசு பொருள் வாங்கிய போது அந்த பரிசு கவரில் விசில் ஒன்று இருந்தது. அதை அஸ்வின் எடுத்து ஊதிய போது தொண்டைக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்களால் விசிலை எடுக்க முடியவில்லை.

பின்னர் எண்டோஸ்கோபி ஸ்கேன் காட்சியில் விசில் நன்றாக தெரிந்தது. அதை கண்டறிந்து டியூப் மூலம் பல மணிநேர போ ராட்டத்துக்கு பின்னர் விசிலை எடுத்தனர் மருத்துவர்கள். தற்போது அஸ்வின் நலமாக உள்ளான் என கூறியுள்ளார்.