இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் மிக தெளிவாக அவதானிக்கப்பட்ட சூரிய கிரகணம்!!

547

சூரிய கிரகணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மைதானத்திலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியற் பீட முன்றலிலும் இன்றைய தினம் சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கான ஏற்பாடுகள் கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், இலங்கையின் தொழிநுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடித்திருந்த நிலையில் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35 – 09:38) வளைய வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) மிகத் தெளிவாக பார்க்க முடிந்ததாக பெருமளவான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் தொழிநுட்ப, புத்தாக்க பிரதி அமைச்சர் திலங்க சுமதிபால, மீன்பிடி, நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி மற்றும் யாழ்ப்பாண,

கொழும்பு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட  பெருமளவானோர் திரண்டிருந்தனர்.

மலையகம் : மலையக மக்கள் சூரிய கிரணத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தவகையில், ஹட்டன் நகரம் உட்பட பல பகுதியில் காலை 09.35 மணியளவில் இருள் சூழ்ந்த நிலை உருவாகியுள்ளது.