கோர விபத்தில் ஒருவர் ப லி!!

315

கோர விபத்தில்..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இவ்விபத்து இன்று (26.12.2019) இடம்பெற்றுள்ளது.

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேனுடன் நுவரெலியாவிலிருந்து நானுஓயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியின் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் உ யிரிழந்த நபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆரியபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் வேன் சாரதியை கைது செய்துள்ளதாக நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.