அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் ப லி : இருவர் படுகாயம்!!

402

கோர விபத்து

எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உ யிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (27.12.2019) அதிகாலை வேளையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிய லொறியில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உ யிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பதலங்கல – குட்டிகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.