சுனாமிக்கு மொத்த குடும்பத்தையும் ப லி கொடுத்து 7வயதில் சிறுவன் எழுதிய உருக வைத்த கடிதம்!!

576

சுனாமிக்கு..

2004ஆம் ஆண்டில் சுனாமியில் சிக்கி தப்பிய சிறுவன் எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டு காண்போரை கலங்க செய்துள்ளது. 7 வயது சிறுவனாக இருந்த தன்வீர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி அன்று நிகழ்ந்த சுனாமி பேரலையில் சிக்கி தனது தாய் தந்தையை இ ழந்தார். மீனவர்களால் கா ப்பாற்றப்பட்ட தன்வீர் தனது தம்பியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொத்துக்கொத்தாக மக்கள் இ றந்து கிடந்த கூட்டத்தில் பெற்றோரையும் கண்டு மனம் இடிந்துபோன தன்வீர் பெற்றோருக்கு இறுதிசடங்கு நிறை வேற்றிய பின் சிவப்பு நிற மையால் ஒன்றரை பக்கத்துக்கு எழுதிய வாக்கியங்கள் இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

அதில், தாங்கள் கடற்கரையில் இறங்கி நின்றவுடன் இரண்டு தென்னை மர உயரத்தில் திறண்டு வந்த ஆழிப்பேரலை, அதில் சி தறடிக்கப்பட்ட மனிதர்கள், கண் முன்னே இறந்த உறவுகள், கையில் கிடைத்த மரத்தைப் பற்றி ஒரு மீனவனால் தான் கா ப்பாற்றப்பட்டது என அனைத்தையும் விவரித்து எழுதியுள்ளார்.

மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த “Welcome to the silver beach” என்ற பலகை முதல், தான் காப்பாற்றப்பட்டது வரை அனைத்தையும் படமாக வரைந்து வைத்துள்ளார். மனிதர்கள் கொத்துக் கொத்தாக ம ரணித்தது குறித்து அவர் வரைந்துள்ள ஓவியம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இது குறித்து தன்வீரின் உறவினரான ஃபரூக், விகடனுக்கு அளித்த பேட்டியியில்,

சுற்றுலா சென்ற இடத்தில் சுனாமியில் சிக்கி என் சகோதரன் கபியுல்லா, அவனின் மனைவி பர்வீன், ஆறு மாத கைக்குழந்தை பிலால் ஆகிய மூவரும் உ யிரிழந்தனர். கபியுல்லாவின் இரண்டு வயது மகன் உயிர் பிழைத்தும் காணாமல் போய் இன்றுவரை கிடைக்கவில்லை.

என் சகோதரன் குடும்பத்தில் தன்வீர் மட்டுமே உயிர் பிழைத்தான். தன் கண்முன்னே இத்தனை கொடூரங்களையும் பார்த்து ரணமாகிப்போன தன்வீர் தன் பெற்றோர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய அன்று இரவே அமர்ந்து இந்த ஓவியத்தையும், வரிகளையும் எழுதினான்.

அப்போது ஏழு வயதாக இருந்த தன்வீர் இன்றைக்கு இளைஞராகி தற்போது லண்டனில் உயர் கல்வி பெற்று வருகிறார். மறக்கமுடியாத அவரது படைப்பை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.