இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை!!

301

Proஇலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு பெண்களை இலங்கையிலும், இலங்கைப் பெண்களை மாலைதீவிலும் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மடபாத்த சதுரானி என்ற இலங்கைப் பெண் மாலைதீவில் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பெண்ணை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவைச் சேர்ந்த சுகுர் என்ற நபரும் இந்த வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் வர்த்தகம் தொடர்பிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 20 மாலைதீவு பெண்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாணவர் வீசாக்களில் மாலைதீவு பெண்களை இலங்கைக்கு அழைத்து, சொகுசு தொடர்மாடி வீடுகளில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மசாஜ் பார்லர் ஒன்றிற்கு இலங்கைப் பெண்களை அழைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மாலைதீவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைப் பெண்கள் மாலைதீவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண்கள், நடுத்தர வயதுடைய மாலைதீவு பெண்களுடன் ஓரினச் சேர்க்கையில் பங்கேற்பதாகக் குறிப்பிடப்படுகிறது.