கோர விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்!!

251

கோர விபத்தில்..

மாத்தறை – கதிர்காமம், பிரதான வீதியின் தங்கலுவெல்யாய பிரதேசத்தில் இன்று (27.12.2019) மதியம் நடந்த வாகன விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான மூன்று மாத குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காரில் பயணித்த இரண்டு பிள்ளைகள், குழந்தையின் தாய், மற்றுமொரு பெண், காரின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.