உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் சாதனை!!

542

கிருஷிகன் ஜெயனாந்தராசா

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், உயிரியல் (Bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், குறித்த மாணவர் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளார். இவருடைய செட் வெட்டுப்புள்ளியானது 3.19 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.