71 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இரத்து!!

274

பரீட்சை பெறுபேறுகள்

2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியேகப்பூர்வ காரணங்கள் வெளியிடப்படவில்லை.

ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3 லட்சத் 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். எனினும் இவர்களில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.