மாணவி சுடர்நிலா

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு மடுக்கரை பகுதியில் வசித்து வருகின்ற குறித்த மாணவி இறுதி யு த்தத்தின் போது தனது தந்தையாரை இழந்த நிலையிலும் 3A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவருடைய தங்கை 2021 கலைப்பிரிவில் கல்வி கற்கின்ற நிலையில் குறித்த மாணவியின் சகோதரன் மேசன்வேலை செய்து தன்னுடைய தங்கைகள் இருவரையும் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் கற்பித்த நிலையில் இம் மாணவி சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவியை மனதார வாழ்த்துவதுடன் பல்கலைக்கழக கல்விக்கு உதவிட நல்லுள்ளம் கொண்டவர்கள் முன்வருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.




