காதல் திருமணம் : கெளரவக் கொ லை செய்யப்போவதாக மி ரட்டல் : இளம்பெண் ப ரபரப்பு புகார்!!

317

இளம்பெண்

தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் க டத்திச் சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சோ்ந்த பியூட்லினும் வெள்ளிச்சந்தையை சோ்ந்த சரண்யாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா்.

இருவேறு பிரிவைச் சோ்ந்த இவா்களுடைய காதலுக்கு சரண்யாவின் பெற்றோர்கள் கடும் எ திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனா். ஆனால் சரண்யா, பியூட்லினை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் காதலா்கள் இருவரும் கோவில் ஒன்றில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனா். இவா்களின் திருமணத்தை பியூட்லினின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால் அவா்களை தங்கள் வீட்டில் அனுமதித்துள்ளனா்.

ஆனால் சரண்யாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு கடும் எ திர்ப்பு தெரிவித்து வெள்ளிச்சந்தை பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனா். இதனையடுத்து பொலிலிசார் அந்த காதல் தம்பதிகளை கடந்த 25 ஆம் திகதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனா்.

காவல்துறையினரின் அழைப்பை ஏற்று அந்த காதல் தம்பதிகள் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டியிருந்த சரண்யாவின் பெற்றோர்களும் உறவினா்களும் பியூட்லினை தா க்கி விட்டு சரண்யாவை க டத்திச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் பியூட்லினின் தாயார் தாசம்மாள் மற்றும் உறவினா்கள், தனது மருமகளை கெளரவக் கொ லைக்காக அவளின் பெற்றோர்கள் க டத்தி சென்று இருப்பதாகவும், மருமகள் சரண்யாவை கெளரவக் கொ லை செய்ய போகிறோம் என போனில் மி ரட்டுவதாகவும், எனவே மருமகளை மீட்டு தர வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.