நித்தியானந்தா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது!!

322

ஆசிரமம்

சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சி றுமிகள் க டத்தப்பட்டதாக எழுந்த பு காரில் நித்யானந்தா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப் பிச்சென்றுள்ளார்.

இதை முதலில் மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பி டித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.

அந்த ஆசிரமம் ச ர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து ச ட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை தரைமட்டமாக இடித்து தள்ளினார்கள்.

உரிய சட்டப்படியும், பொலிசுக்கும் கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை இடித்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.