வவுனியாவில் குத்துச்சண்டை வீராங்கனை சடலமாக மீட்பு!!

851

சிவானந்தம் சுலக்சனபிரியா

வவுனியா – கொக்குவெளிப் பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் ச டலம் நேற்று (29.12.2019) இரவு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி நேற்றைய தினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்த போதும் அவர் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளனர்.

இந்த நிலையிலேயே வீட்டு கிணற்றில் மூழ்கிய நிலையில் யுவதி ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். ச டலம் உடற்கூற்று ப ரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொக்குவெளி பகுதியை சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (வயது 19) என்ற பெண்ணே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா காமினி மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் குறித்த பெண் அண்மையில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல்நிலை இடங்களை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.