கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

257

கிணற்றிலிருந்து..

மூதூர் பகுதியில் கிணறொன்றிலிருந்து இளைஞனொருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்தே இளைஞன் ஒருவரின் ச டலமொன்று நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் கிளிவெட்டி, 58, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாகரன் கிஜோதன் என்ற 18 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து கா ணாமல் போயிருந்த நிலையில் இளைஞனை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் ஈடுபட்டிருந்த வேளை அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த அவரது மாமா தற்செயலாக வீட்டுக்கு முன்னால் உள்ள கிணற்றை பார்வையிட்டபோது கிணற்றுக்குள் ச டலம் தென்பட்டதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலத்தை உறவினர்கள் கிணற்றுக்குள் கிடப்பதை அவதானித்து இருந்த நிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்ட மூதூர் பொலிஸார் சடலத்தை திடீர் ம ரண விசாரணை அதிகாரி ஏ. ஏ ஜே. எம். நூறுல்லாஹ் முன்னிலையில் மீட்டனர்.

இந்நிலையில் கிணற்றுக்குள் விழுந்து ம ரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம் நூறுல்லாஹ் ச டலத்தை பி ரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.