வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!!

377

வடமாகாணத்தில்..

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் கடமையாற்றி வந்த நிலையில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது யாழில் கடமையாற்றும் 120 தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.