50க்கும் மேற்பட்ட பயணிகளை கா ப்பாற்றிவிட்டு உ யிரிழந்த பேரூந்து சாரதி : சோக சம்பவம்!!

256

பேரூந்து சாரதி

தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பணியில் இருந்த போது நெ ஞ்சுவ லி ஏற்பட்டதால், பேருந்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். 50 வயதான இவர் சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சங்கராபுரம் – மல்லாபுரம் செல்லும் பேருந்தை இயக்கி வந்த இவர், பிற்பகல் உள்ளூர் நேரப்படி 2:00 மணியளவில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் சென்று கொண்டிருந்தபோது தேவபாண்டலம் அருகே தி டீரென பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, ஸ்டியரிங்கில் பாண்டியன் ம யங்கி வி ழுந்தார்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் கண்ட்ரக்டர் ஆம்புலன்ஸ் முலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் பாண்டியனை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பாண்டியன் இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

நெஞ்சு வ லியிலும் பேருந்தை ஓரமாக நிறுத்தி 50-க்கும் மேற்பட்ட பயணிகளைக் கா ப்பாற்றி, உ யிரைவிட்ட டிரைவரை நினைத்து பயணிகள் சோ கத்தில் ஆழ்ந்தனர். உ யிரிழந்த பாண்டியனுக்கு 40 வயதில் மனைவியும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.