தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…

393


england

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.



நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் தென் ஆப்பிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 38.4 ஓவர்களில் 175 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.



இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 37.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.



இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறவுள்ள இலங்கை, இந்திய அணிகளுகிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.