புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் : 6 பேர்பரிதாபமாக பலி!!

363

புத்தாண்டு கொண்டாட்டத்தில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 70 அடி உயரத்தில் இருந்து லிப்ட் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான புனீத் அகர்வால் என்பவரது பண்ணை வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தூரின் படல்பானி பகுதியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை புத்தாண்டு கொண்டாட அங்கு சென்றுள்ளார்.

கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக புனீத் அகர்வால், அவரது மகள் மற்றும் உறவினர்கள் பண்ணை வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் ஒரு கோபுரத்தில் உள்ள லிப்டில் ஏறி மேல் தளத்திலிருந்து வெளி அழகை பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் லிப்டில் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் கோளாறால் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் புனீத் அகர்வால்(53), அவரது மகள் பாலக் அகர்வால் (27), மருமகன் பால்கேஷ் அகர்வால் (28), பேரன் நாவ் (2), உறவினர்கள் கவுரவ் (40), ஆர்யவீர் (11) ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.

புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலே நின்று விட்டதால் அவர் இந்த கோர விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.