இலங்கையில் 2 இந்திய வங்கிகளின் சேவை நிறுத்தம்!!

538

இந்திய வங்கிகள்

இலங்கையில் இயங்கி வரும் இரண்டு இந்திய வங்கிகள் தங்களுக்கான சேவைகள் அனைத்தையும் நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டு வங்கியின் தலைமை வேண்டுகோளுக்கு இணங்க ஐ.சி.ஐ.சி-ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளின் சேவை இலங்கையில் நிறுத்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில், இலங்கை மத்திய அரசு நிதி நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளது. வங்கிகளின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டபின்னர், இந்த வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்யும்.

அதன் பின் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது உள்பட வங்கி நடவடிக்கைகள் எதுவும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிப்படாது.