வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் : ஒருவர் பலி : இருவர் காயம்!!

501

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (03.01.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உ யிரிழந்தவர் வயது 72 உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.