கனடாவில்..
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞன் கா ணாமல் போயுள்ள நிலையில், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த இளைஞன் கனேடிய நேரப்படி காலை 10:30 மணியளவில் Middlefield Rd & Finch Ave சந்திப்பில் கண்டதாக தெரியவந்துள்ளது. கா ணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்தார்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.