வெளிநாட்டில் வேலைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பண மோ சடி : பெண் ஒருவர் கைது!!

502

வெளிநாட்டில் வேலை..

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோ சடியில் ஈடுபட்ட சந்தேக நபரான பெண் ஒருவர் ஹொரவ்வப்பொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்நாமில் தொழில் வாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை இவர் மோ சடி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஹொரவப்பொத்தானை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.