வவுனியா நகரசபை வளாகத்திற்கும் பூங்காவிற்கும் சுகாதாரப் பிரிவினர் சிவப்பு எச்சரிக்கை!!

423

சிவப்பு எச்சரிக்கை

வவுனியா நகரபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவிற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் நகரசபை பூங்கா மற்றும் நகரசபை வளாகம் ஆகிய இரண்டிற்கும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இங்கு டெங்கு பரவும் அ பாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் அகற்றி நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதினை

மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறும் இவ் அறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , பெரியோர்கள் வருகை தரும் நகரசபை பூங்காவில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்ற டெங்கு பரவும் இடங்களை நகரசபையினர் சுத்தப்படுத்துவார்களா?

வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.