மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானம் பறவையுடன் மோ தியமை உறுதி!!

548

விமானம்

எமிரேட்ஸூக்கு சொந்தமான 777 போயிங் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்துக்கு சென்று திரும்பியபோது பறவை ஒ ன்றுடன் மோ தியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் வழமையான பணிகளில் ஈடுபடாமல் அ வசரமான விமான தரையிறங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 18ஆம் திகதியன்று காலநிலை சீ ர்கே ட்டினால் டுபாயில் இருந்து கட்டுநாயக்கவுக்கு சென்ற எமிரேட்ஸின் விமானம் மத்தளவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதேவேளை தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் புறப்பட்ட வேளையில் ப றவையுடன் மோ தியுள்ளது.

இதன்போது விமானத்தில் 73 பயணிகள் இருந்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்றபோதும் அதனால் விமானத்துக்கு பா திப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே மத்தள விமான நிலையப் பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பில் எ ச்சரிக் கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் ஏப்ரலில் 170 பயணிகளுடன் மத்தளவில் தரையிறங்கிய ப்லைடுபாய் விமானம் ப றவையுடன் மோ தியமை குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் பறவைகள் மோ துவது பொதுவாக இடம்பெறுவதில்லை. எனினும் இலங்கையில் 2018ஆம் ஆண்டில் இவ்வாறான 83 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 42 சம்பவங்கள் கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.