வெளிநாடு ஒன்றில் உ யிரிழந்த இலங்கை மா ணவிகள் : அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

481

இலங்கை மா ணவிகள்

அஸர்பைஜானில் உ யிரிழந்த மூன்று மாணவிகளின் ச டலங்களையும் அரசாங்க செலவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்த மாணவிகளின் ச டலங்களை வெகு விரைவில் இலங்கைக்கு கொண்டு வரப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் ம ரணத்தினை அடுத்து இலங்கை மாணவர்கள் வெளிநாடு செல்வதனை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸர்பைஜானில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில பட்ட படிப்பு கற்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த மாணவிகள் அங்கு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதேவேளை அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் உ யிரிழந்தமை தொடர் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.