வவுனியாவில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்டப் போட்டியில் மருதநிலா அணி சம்பியன்!!(படங்கள்)

349

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ம் திகதி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வவுனியா மருதநிலா உதைப்பந்தாட்டக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போட்டியில் 17 அணிகள் பங்குபற்றின. இதில் இறுதிப் போட்டியில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் கற்குழி மருதநிலா விளையாட்டுக் கழகமும் மோதியது. இதில் 1:2 என்ற கணக்கில் மருதநிலா வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

வவுனியா சம்மேளனப் பொருளாளர் ஏ.ஆர்.எம்.நரிஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதிப் போட்டியில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ரொற்றிக்கோ உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

1 3 4 2